யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தற்பளை தனிமைப்படுத்தல் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 28 பேர் சிகிச்சைக்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் கட்டங்கட்டமாக கொரோனா தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
அதற்கமைய கடந்த 28ஆம் திகதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கடற்படையினரில் 51 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்கள் இன்று காலை சிகிச்சைக்காக வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்